வேப்பந்தட்டையில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் விவசாயிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

பெரம்பலூர், ஆக. 7: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்ட மாநாடு வேப்பந்தட்டையில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தன் தலைமை வகித்தார். வட்டதலைவர் .சாமிதுரை, செயலாளர் ராமச்சந்திரன், துணைதலைவர் செங்கமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பச்சைமலை கல்லாறு, சின்ன முட்லு நீர்த்தேக்க திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், வேப்பந்தட்டையில் வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கால்நடை பராமரிப்பிற்கு மானிய விலையில் தீவனம் வழங்கி பால் உற்பத்தியாளர்களுக்கு பால் மாட்டு கடன் வழங்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெள்ளுவாடி பள்ளி குழந்தைகள் உரிய பேருந்து வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர் உடனே பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும். தோட்டக்கலை மின் இணைப்புகளை இலவச மின்சாரமாக மாற்றித்தர வேண்டும், மதிப்புகூட்டு பொருள் தயாரிக்க வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பாரபட்சம் காட்டாமல் கடன் உதவிகள் வழங்கி விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், மாடுகளுக்கு கோமாரி மற்றும் அம்மை நோய் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் சின்னசாமி, விவசாயிகள் கூட்டமைப்பு ஆரோக்கியசாமி மகளிர் அணி கார்த்திகா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட தலைவர்.ராஜேந்திரன் நிறைவுரை ஆற்றினார். நிர்வாகி சண்முகம் நன்றி கூறினார். சிறுமி பாலியல் பலாத்காரம் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது ஜெயங்கொண்டம், ஆக.8: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள நாயகனைபிரியாள் வடக்கு தெருவை சேர்ந்தவர் சின்ன ராசா மகன் மன்மத ராசா (22) மற்றும் அதே ஊரை சேர்ந்த காந்தரூபன் மகன் கமரன் (22) ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி இரவு மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலைகதிரவன், அரியலூர் எஸ்பி பெரோஸ் கான் அப்துல்லா ஆகியோர் பரிந்துரையின் பேரில் மன்மதராசா, கமரன் இருவரையும் ஒரு வருடம் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: