கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நேற்று மொழிப்போரில் உயிர் தியாகம் செய்த தியாகிகளின் படங்களுக்கு அஞ்சலி
செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான செங்குட்டுவன் தலைமை வகித்து, தியாகிகளின் படங்களுக்கும், மொழிப்போர் தியாகியும், கிருஷ்ணகிரி நகர்மன்ற முன்னாள் தலைவருமான மறைந்த வெங்கடாஜலம் படத்திற்கும், மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், மொழிப் போர் தியாகி தனபாலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.