கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மகாராஜகடை தாசினானூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(23), விவசாயி. இவர் நாரலப்பள்ளி கூட்ரோடு பகுதியில் நடந்து சென்ற போது, அவ்வழியாக வந்த நபர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். அப்போது, அங்கிருந்தவர்களின் உதவியுடன் அந்த நபரை சுப்பிரமணி சுற்றி வளைத்து பிடித்தார்.