அரியலூர் மேற்கு பகுதியில் 28ம் தேதி மின்நிறுத்தம்

அரியலூர்,ஜன.26: கூத்தூர் தொகுப்பு துணைமின் நிலைய பகுதியில் வரும் 28ம்தேதி (வெள்ளிகிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை கூத்தூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அரியலூர் மேற்கு பகுதி, பி.ஆர்.நல்லூர், ஜெமீன் பேரையூர், கூத்தூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூர், வெண்மணி, திம்மூர் மற்றும் மேத்தால் ஆகிய ஊர்களில் மின் விநியோகம் இருக்காது என அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Related Stories: