பெரம்பலூர் அருகே வீட்டில் கொள்ளையடித்த 2 பெண்கள் கைது

பெரம்பலூர்,ஜன.24: பெரம்பலூர் அருகே அனைப்பாடி கிராமத்தில் ஆளில்லா வீட் டில் கொள்ளையடித்த 2 பெண்களை கைது செய்து 15 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, மருவத்தூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அனைப்பாடி கிரா மத்தில் மேலத் தெருவைச் சேர்ந்தவர் வள்ளாளி(68). இவரது மகன்கள் ராமசாமி (43), முருகானந்தம்(40). தந் தையோடு திருமணமான மகன்கள் இருவரும் ஒரே வீட்டில் பிள்ளைகளுடன் 2குடும்பத்தினரும் கூட்டு குடும்பமாக வசித்து வரு கின்றனர். கடந்த 18ம்தேதி 2குடும்பத்தாரும் வயலுக்கு வேலைக்குக் சென்றுவிட்டு மாலையில் வீடுதிரும்பி யநேரத்தில் தம்பி முருகான ந்தம் இருக்கும் அறையில் பீரோ உள் லாக்கரில் வைத் திருந்த 15 1/2 பவுன் நகை களைக் காவில்லை. இதுகு றித்து முருகானந்தம் கொ டுத்தப் புகாரின்பேரில் மரு வத்தூர் போலீசார் வழக்கு ப் பதிவுசெய்து கொள்ளை யரைத் தேடிவந்தனர்.இந்நிலையில் அதே அனை ப்பாடி கிராமம், மேலத்தெரு வைச் சேர்ந்த சக்திவேல் மனைவி மலர்(35), ராஜேந் திரன் மனைவி சுமதி(40) ஆகிய இருவர்தான் நகை களை திருடினார்கள் என் பது தெரியவந்ததால் நேற் று (23ம்தேதி) இருவரையும் மருவத்தூர் போலீசார் கை து செய்து அவர்களிடமிரு ந்து 15பவுன் நகைகளைப் பறிமுதல் செய்து, இருவ ர யும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: