லால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு

லால்குடி, ஏப். 23: லால்குடி அடுத்த எல்அபிஷேகபுரம் பகுதி வயல் காட்டில் நேற்று அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து லால்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டனர். சேலை அணிந்திருந்த பெண், தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: