மயிலாடுதுறை, ஏப்.23: தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி புதுடெல்லி தல்கதோரா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. சீக்கிய அமைப்பினரால் நடத்தப்பட்ட இப்போட்டியில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றதில் பிரதானமாக சிலம்பப்போட்டிகள் 5 வயது முதல் 7 வயதுவரையிலும், 8 வயது முதல் 12 வயதுவரையிலும், 13 வயது முதல் 15 வயது பிரிவினருக்கும் நடைபெற்றது. இதில் தமிழகத்திலுருந்து சீர்காழி வீரத்தமிழர் சிலம்பாட்டக்கழகம் மற்றும் காரைக்கால் குமார் மார்ஷியல் ஆர்ட்ஸ் கழகத்தை சேர்ந்த மொத்தம் 54 வீரர்கள் கலந்துகொண்டனர். சீர்காழி வீரத்தமிர் சிலம்பாட்டக் கழகத்தை சேர்ந்த 9 பேர் தங்கப்பதக்கம் மற்றும் 8 வெள்ளிப்பதக்கங்களை பெற்றனர்.