குடியாத்தம், ஏப். 20: குடியாத்தத்தில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக கெங்கையம்மன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்தது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் கெங்கை அம்மன் சிரசு திருவிழா பிரசித்தி பெற்ற திருவிழா ஆகும். ஆண்டுதோறும் வைகாசி 1ம் தேதி சிரசு திருவிழா நடைபெறுவது வழக்கம். முன்னதாக திருத்தேர் ஊர்வலம் நடைபெறும். இதில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். இதற்காக ஒரு மாதத்திற்கு முன்னரே குடியாத்தம் கெங்கை அம்மன் கோயில் வளாகத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தேங்காய் உடைத்தும், பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வருவது வழக்கம். மேலும், குடியாத்தம் நேதாஜி பஸ் நிலைய பகுதியில் திருவிழாக்காலங்களில் கூட்ட நெரிசலாக காணப்படும்.