பெரம்பலூர்,ஏப்.20: ராஜஸ்தான் மாநிலத்திற்கு ஜவுளி ஏற்றி சென்று காணாமல் போன லாரி டிரைவரை கண்டுபிடித்து தரும்படி, அவரது மனைவி தனது பிள்ளைகள், உறவினர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீருடன் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பெரியம்மாபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(48). இவரது மனைவி தனலட்சுமி(40) இவர் நேற்று தனது இரண்டு குழந்தைகள் மற்றும் உறவினருடன் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தார்.
அங்கு கண்ணீருடன் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது : எனது கணவர் ரவிச்சந்திரன் நாமக்கலில் லாரி டிரைவராக கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 12ம் தேதி ஈரோட்டிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகருக்கு டிஎன்28 ஏடி- 0115 என்ற பதிவில் கொண்ட லாரியில் ஜவுளி லோடு ஏற்றி சென்றார்.