கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கமுதி, ஏப்.20: கமுதி அருகே கஞ்சா வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். கமுதி அருகே எழுவனூர் அரசு பள்ளி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, இன்ஸ்பெக்டர் அன்புபிரகாசம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் சென்றனர். அப்போது சிலிப்பி என்ற ஊரைச் சேர்ந்த ஆதிமூலம்(30) சாக்கு மூட்டை பையில் 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக ஆதிமூலம் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்த 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மண்டலமாணிக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: