முஸ்லிம் வணிகர் நலச்சங்கம் சார்பில். ஏரலில் கபசுர குடிநீர் வழங்கல்

ஏரல், ஏப்.20: ஏரலில் முஸ்லிம் வணிகர் நலச்சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முஸ்லிம் வணிகர் நலச்சங்கம் தலைவர் பாக்கர்அலி தலைமை வகித்தார். ஏரல் போலீஸ் எஸ்.ஐக்கள் ராஜாமணி, அமலோஷ்பவம், மின்சாரதுறை உதவி பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெனிதா பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் நிஜாம்தீன், பிஸ்மிசுல்தான், சாதிக் ரிபாய்தீன், ஆவுல்பாஷா, முகமதுயாசீம், பைசல், சாதிக், கசாலி, தவ்பிக் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: