திருச்சி, ஏப்.16: புதிய விலையில் உரங்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் எச்சரித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் நடப்பு கோடைகால பருவத்தில் 10,128 எக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியம், தோட்டக்கலை பயிர்கள், காய்கறி பயிர்கள் முதலானவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது திருச்சி மாவட்டத்தில் இப்பயிர்களுக்கு தேவையான 24,189 மெ.டன் மொத்த உரங்கள் இருப்பில் உள்ளன. இதில் 5,456 மெ.டன் யூரியா, 1,288 மெ.டன் டி.ஏ.பி, 4,715 மெ.டன் பொட்டாஷ், 11,334 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள், 891 மெ.டன் சூப்பர் பாஸ்பேட் ஆகிய உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் உரக்கடைகள் மூலம் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உர விற்பனையின் போது புதிய விலையில் விற்பனை செய்தல் கூடாது.