நாகை, ஏப்.19: தமிழகத்தின் பானம் எனக்கூறப்படும் பதநீர் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே கிடைக்கும். தற்போது பதநீர் சீசன் தொடங்கியுள்ளதால் நாகையில் வேளாங்கண்ணி, தெற்குபெய்கைநல்லூர், பரவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பனைமரங்களில் இருந்து அரசு அனுமதியுடன் பதநீர் இறக்குவதற்காக வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முதலில் பனைகளின் பாளைகளை சீவி நுனியில் வடியும் நீரை சுண்ணாம்பு தடவிய பானைகள் மூலம் சேகரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். இவ்வாறு சேகரித்ததே இனிப்புடன் கூடிய பதநீர் ஆகும்.