திருப்போரூர், ஏப்.19: திருப்போரூர் ஒன்றியத்தில், மயிலை ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் நடந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். திருப்போரூர் ஒன்றியம் மயிலை ஊராட்சியில் கடந்த 1 ஆண்டாக முறையான குடிநீர் விநியோகம் இல்லை என கூறியும், இதைக் கேட்கும்போது ஊராட்சி செயலாளர் முனுசாமி என்பவர் பொதுமக்களை அவதூறாக பேசுவதாகவும் கூறி, கடந்த 2 நாட்களுக்கு முன் அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பேராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சைமன் ஜெரால்டு, முற்றுகையிட்ட பெண்களிடம், சமரச பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வினியோகம் செய்யும் மோட்டாரில் பழுது ஏற்பட்டுள்ளதாகவும், அது சரி செய்யப்படும் வரை டிராக்டர் மூலம் தெருக்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.