கொடைக்கானல், ஏப்.19:கொடைக்கானல் பைன்மரக்காடுகள் சுற்றுலா பகுதியில் புதிய பாலத்தில் அடிக்கடி சுற்றுலா வாகனங்கள் சிக்குவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கொடைக்கானலில் சுற்றுலா இடங்கள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மோயர் பாயிண்ட், குணாகுகை, பைன் மரக்காடுகள், தூண்பாறை உள்ளிட்ட இடங்கள் சென்று ரசித்து வருவார்கள். இந்த பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலைகளில் நெடுஞ்சாலை துறை மூலம் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கனரக எந்திரங்களை வைத்து சாலைகளை தோண்டி வேலைபார்த்தும் வருகின்றனர். இப்பகுதி வழியே செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்திற்கு உள்ளாகி வருகிறது. நேற்று சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்த நிலையில் சுற்றுலா வாகனங்களும் அதிகளவில் வந்தது. இந்த பகுதிகள் புதிய பாலம் கட்டும் பணி நடைபெறும் இடத்தில் சுற்றுலா வாகனம் ஒன்று சிக்கியது.