பர்கூர் அருகே தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி டிரைவர் உள்பட 6 பேர் காயம்

கிருஷ்ணகிரி, ஏப்.19: சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. மேல்மலையனூர் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன்(46) என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். கண்டக்டராக திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜான்முகமது(43) என்பவர் பணியில் இருந்தார். பஸ்சில் 36 பேர் பயணம் செய்தனர். சென்னை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், பர்கூர் அடுத்த பிஆர்ஜி மாதேப்பள்ளி பகுதியில் தனியார் மண்டபம் எதிரில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது மோதி, சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதி நின்றது. இதில் பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகளான செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த வேலு(39), நந்தன்(28), ரங்கராஜ்(45), சித்தூர் கிருஷ்ணப்பா(52) ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஒரு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: