திருவண்ணாமலை, ஏப்.18: பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரான திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைப்பது குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை பரிசீலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரான திருவண்ணாமலைக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். எனவே, பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலையில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என சமீபத்தில் மக்களவையில் விமான திருத்தச்சட்ட மசோதா விவாதத்தின்போது திருவண்ணாமலை தொகுதி எம்பி சி.என்.அண்ணாதுரை கோரிக்கை வைத்திருந்தார். மேலும், மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர், நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி, மத்திய அமைச்சரவை செயலாளர் ஆகியோரை சமீபத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்திருந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, திருவண்ணாமலை தொகுதி எம்பி சி.என்.அண்ணாதுரைக்கு தற்போது அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: