₹30 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

இடைப்பாடி, ஏப்.18: கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில், நேற்று விவசாயிகள் கொண்டு வந்த 1,300 மூட்டை பருத்தி ₹30 லட்சத்துக்கு ஏலம் போனது. திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி கூட்டுறவு விற்பனையாளர்கள் சங்கத்தின் கொங்கணாபுரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. சேலம், மேட்டூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் 1,300 மூட்டை பருத்தியை கொண்டு வந்திருந்தனர். சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவையை சேர்ந்த வியாபாரகிள் ஏலத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் டிடிஎச் ரகம் பருத்தி குவிண்டால் ₹7,550 முதல் ₹9,090 வரையும், பிடி ரகம் பருத்தி குவிண்டால் ₹6,690 முதல் ₹7,819 வரையும் ஏலம் போனது. ஒட்டுமொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 1,300 மூட்டை பருத்தி, ₹30 லட்சத்துக்கு ஏலம் போனது என கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: