கூடுவாஞ்சேரி, ஏப். 17: கொரோனா பரவல் எதிரொலியால் குறைந்த அளவே பார்வையாளர்கள் வருகின்றனர். இதனால், வண்டலூர் உயிரியல் பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், கரடி, யானை, மான்கள் உள்பட அரிய வகை விலங்குகளும், பறவைகளும் ஏராளமாக உள்ளன. இதனை காண தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதில், கோடைகாலத்தில் பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். மேலும், தற்போது கோடைகாலம் என்பதால் யானைகளுக்கு ஷவர் குளியல் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், கொரோனா 2வது அலை காரணமாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் வந்து கண்டுகளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால், வண்டலூர் உயிரியல் பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது.