பொன்னேரி, ஏப்.16: மீஞ்சூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 7,000 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என, வட்டார தலைமை மருத்துவர் ராஜேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னேரி, பழவேற்காடு அரசு பொதுமருத்துவமனைகள் மற்றும் மீஞ்சூர், காட்டூர், தேவம்பட்டு, அத்திப்பட்டு உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமாக அந்தந்த மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசியினை போட்டுக் கொள்கின்றனர்.