வேடசந்தூர், ஏப். 15: வேடசந்தூர் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் இளம் தம்பதி பலியாக, குழந்தை படுகாயமடைந்தது. வேடசந்தூர் அருகே கொன்னாம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (எ) சிக்கனன் (30). மில்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி மல்லிகா (25). மகள் வீரதிம்மு (4) ஆகியோருடன் வேடசந்தூர் நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தனர். தம்மனம்பட்டி அருகே வந்த போது அவ்வழியே கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் இவர்களது டூவீலர் மீது மோதியது. இதில் சதீஷ்குமார், மல்லிகா, வீரதிம்மு ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். 3 பேரையும் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்த போது சதீஷ்குமார், மல்லிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வீரதிம்முவை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.