அரியலூர், மார்ச் 18: அரியலூர் தொகுதிக்குட்பட்ட திருமானூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் தாமரை ராஜேந்திரன் 2வது நாளாக நேற்று வாக்கு சேகரித்தார். இந்த ஒன்றியத்தில் உள்ள தொடக்க வேளாண் வங்கிகளில் கடன் பெற்று வந்த 5 ஆயிரம் விவசாயிகளின் ரூ.20 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிமுக அரசு அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் தொடர்ந்து செயல்பட அதிமுகவுக்கு வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார். சேனாபதி முடிகொண்டான், பாளையபாடி, திருமானூர் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று தாமரை ராஜேந்திரன் ஓட்டு சேகரித்தார். இந்த பிரசார பயணத்தில் அரசு கொறடா, அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி, பாமக மாவட்ட தலைவர் குமார், அதிமுக ஒன்றிய செயலாளர் வடிவழகன், பாஜக ஐயாறப்பன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.