இடையன்விளையில் நாளை வைகுண்டர் அவதார தினம்

நாசரேத், மார்ச் 3: இடையன்விளை அய்யாவைகுண்டசாமி பதியில்  189வது அவதாரதினவிழா நாளை  (4ம் தேதி) நடக்கிறது.

 நாசரேத் அருகே இடையன்விளை அய்யா வைகுண்டசாமிபதியில் அய்யாவின் ்அவதார தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி 189வது அவதார தின விழா நாளை (4ம் தேதி) விமரிசையாக நடக்கிறது. அய்யாவின் அருளாளர் ஐயன்சாமி தலைமை வகித்து விழாவை துவக்கிவைக்கிறார். இதையொட்டி மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், மதியம் 1 மணிக்கு அன்னதானமும் நடைபெறும். மேலும் இங்கு வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு அய்யாவின் அருள்வாக்கு நிகழ்ச்சி நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

 ஏற்பாடுகளை அய்யாவின் அருளாளர் ஐயன்சாமி தலைமையில் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

Related Stories: