கோயிலில் திருட்டு

சாத்தான்குளம், மார்ச் 3:  சாத்தான்குளம் அருகே உதிரமாடன் குடியிருப்பு கருமேனி ஆற்றுப்பகுதியில் செண்பக கூத்தையா என்ற செம்புகுட்டி அய்யனார் கோயில் உள்ளது.  இக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவராக மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் இருந்து வருகிறார். கடந்த பிப். 28ம் தேதி கோயில் பூசாரியான குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்த முத்துமாணிக்கம்,  இரவு பூஜையை முடித்தபிறகு பூட்டிவிட்டுச்சென்றார்.  

 பின்னர் நேற்று காலை திரும்பியபோது கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு பதறினார். உள்ளே சென்றபோது அங்கிருந்த 2 பித்தளை சரவிளக்கு, பெரிய குத்துவிளக்கு,  சிவலிங்கத்திற்கு அணிவிக்கப்படும் வெள்ளி நெற்றிபட்டை மற்றும் 2  மின்மோட்டர்களை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.  தட்டார்மடம் எஸ்.ஐ. நெல்சன் வழக்குப் பதிந்து மர்மநபர்களைத் தேடி வருகிறார்.

Related Stories: