பாதயாத்திரை பக்தர் இருவர் மீது தாக்குதல் 4 பேருக்கு வலை

திருச்செந்தூர், மார்ச் 3: திருச்செந்தூருக்கு வந்த பாதயாத்திரையாக வந்த பக்தர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.  சாத்தான்குளம் அருகே சடையன்கிணறு, லயன் தெருவைச் சேர்ந்த ராமையா மகன் பாலமுருகன் (26). இவரது அண்ணன் சிவபெருமாள் (29). இவர்களும், குடும்பத்தினரும் சடையன்கிணறு பகுதியில் இருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்து கொண்டிருந்தனர். நாலுமூலைக்கிணறு பிச்சிவிளை சந்திப்பு அருகே பாலமுருகன், அவரது அண்ணன் சிவபெருமாள் மற்றும் குடும்பத்தி னர் வந்த போது சடையன்கிணறைச் சேர்ந்த முனியசாமி மகன் முத்தரசன், இசக்கிமுத்து என்ற கட்டையன் மகன் ஆகாஷ் மற்றும் 2 பேர் பைக்கில் வந்து அவர்களை வழிமறித்து தாக்கி காயப்படுத்தினர். மேலும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர். இதில் படுகாயம் அடைந்த சிவபெருமாள் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பாலமுருகன் அளித்த புகாரின் பேரில்  முத்தரசன் ஆகாஷ் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிந்த திருச்செந்தூர்  எஸ்ஐ அந்தோனிதுரைசிங்கம், 4 பேரையும் தேடி வருகிறார்.

Related Stories: