தட்டார்மடத்தில் ஜெயலலிதா பிறந்தநாள்

சாத்தான்குளம், மார்ச் 2:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 5000பேருக்கு நலத்திட்ட உதவிகளை சண்முகநாதன் எம்எல்ஏ வழங்கினார். சாத்தான்குளம் அருகே தட்டார்மடத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெ.பேரவை, ஒன்றிய, நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் அச்சம்பாடு சவுந்தரபாண்டி தலைமை வகித்தார். சாத்தான்குளம் யூனியன் தலைவர் ஜெயபதி, மாவட்ட ஜெ.பேரவை துணை செயலாளர் பொன்முருகேசன், மாவட்ட கவுன்சிலர் தேவவிண்ணரசி, ஒன்றிய மாணவரணி செயலாளர் ஸ்டேன்லி, அவைத்தலைவர் பரமசிவபாண்டியன், முன்னாள் யூனியன் சேர்மன் ஆனந்தராஜா, புதுக்குளம் பஞ்.தலைவர் பால்மேனன் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஜெ.பேரவை துணை செயலாளர் தட்டார்மடம் ஞானபிரகாசம் வரவேற்றார்.தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏ, தையல் மிஷின்கள், ஏழைகளுக்கு வேஷ்டி, சேலைகள், விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் உள்பட 5000 பேருக்கு நலத்திட்டங்களை வழங்கி பேசினார்.

கூட்டத்தில் தெற்கு மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாநில பேச்சாளர்கள் ராம், மாநாடு பால்துரை, ஞானையா, சாத்தான்குளம் நகர செயலாளர் குமரகுருபரன், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு  விஜயகுமார், மேற்கு ராஜ்நாராயணன்,  யூனியன் துணைத்தலைவர் அப்பாத்துரை, ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன், துணைச்செயலாளர் சின்னத்துரை, விவசாய பிரிவு தலைவர் பால்துரை, எம்ஜிஆர் மன்ற தலைவர் அன்ன கணேசன், இணைச் செயலாளர் பொன்பாண்டி, ஜெ.பேரவை ஒன்றிய தலைவர் சின்னத்துரை, கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பாண்டியராஜ், யூனியன் கவுன்சிலர்கள் செல்வம், சசிகலா, முன்னாள் துணைசேர்மன் ஜெயராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக தெற்கு மாவட்ட ஜெ.பேரவை இணைச் செயலாளர் ஞானப்பிரகாசம், முன்னாள் யூனியன் தலைவர் தலைவர் ஆனந்தராஜா ஆகியோர் தலைமையில் கட்சியினர் சண்முகநாதன் எம்எல்ஏவுக்கு மாலை அணிவித்து வெள்ளிவேல் வழங்கினர். விவசாய அணி ஒன்றிய செயலாளர் சந்திரசேகர்  நன்றி கூறினார்.

Related Stories: