நாசரேத் மார்ச் 2: நாசரேத் அருகே உள்ள சின்னமதிக்கூடல் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் யோகராஜ், வடிவேல் மகன் முத்துப்பாண்டி உள்பட 22 பேர் மில் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக நாசரேத் சக்தி விநாயகர் கோயில் அருகில் உள்ள ரோட்டில் நின்று கொண்டு தேர்தல் விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முத்துராமன் நாசரேத் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் எஸ்.ஐ சுப்பிரமணியன் விசாரணை நடத்தி 22பேர் மீது வழக்குபதிவு செய்தார்.