தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்

தூத்துக்குடி,மார்ச் 2: தூத்துக்குடியில் சட்டமன்ற தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ்,  துவக்கி வைத்தார். தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்டத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் வீடியோ வாகனத்தின் மூலம் சட்டமன்ற தேர்தல் 2021 விழிப்புணர்வு பிரசார பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ்  துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர். செய்தி மக்கள் தொடர்புத்துறையின் வீடியோ வாகனத்தின் மூலம் தேர்தல் வைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளில் தலா 5 தினம் என இன்று முதல் 30 தினங்களுக்கு சட்டமன்ற தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.

Related Stories: