ஸ்பிக்நகர், மார்ச் 2: முள்ளக்காடு பகுதியை சேர்ந்த கோபால்(58). தச்சு வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் இவருடன் வேலைபார்த்து வரும் அய்யாச்சாமி என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பிரச்னை இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அய்யாசாமி, கோபாலை தாக்கினார். இதில் காயமடைந்த கோபால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து முத்தையாபுரம் எஸ்ஐ சதிஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.