கொடைக்கானலில் வாக்காளர் தின விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

கொடைக்கானல், ஜன. 26: கொடைக்கானல் ஏரிச்சாலையில் 11வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.  சப்கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்து, துவக்கி வைத்தார். தப்பாட்டம், சிலம்பாட்டம், கல்லூரி மாணவிகளின் மேடை நாடகம் உள்ளிட்டவை மூலம் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு வாக்களிப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு குறித்த துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் வட்டாட்சியர் சந்திரன், நகராட்சி ஆணையாளர் நாராயணன், முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் ரோகன்சாம்பாபு, அப்சர்வேட்டரி விஞ்ஞானி எபினேசர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

Related Stories: