திண்டுக்கல், ஜன. 26: சின்னாளபட்டி பகுதியில் 2018ம் ஆண்டில் படித்த மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
சின்னாளபட்டி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், ‘திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2017-18ம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகளுக்கு அரசு இதுவரை இலவச லேப்டாப் வழங்கவில்லை. எங்களுக்கு முன்பு படித்தவர்களுக்கு கூட லேப்டாப் வழங்கி விட்டனர்.