சின்னாளபட்டி, ஜன. 24: ஆத்தூர் பகுதியில் தொடர்மழையால் மக்காச்சோள பயிர்கள் தக்கையாக மாறியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வக்கம்பட்டி, மல்லையாபுரம், அக்கரைப்பட்டி பகுதிகளில் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலில் பாதிக்கப்பட்டாலும் குறுகிய கால பயிர், அதிக வருவாய் போன்ற காரணங்களால் இப்பகுதி விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த ஆடி மாதம் மக்காச்சோளம் பயிரை இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டிருந்தனர்.