×

₹8 லட்சம் மதிப்பில் ஆர்.ஓ.நிலையம் திறப்பு

கடத்தூர், ஆக. 9: கடத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ரேகடஅள்ளி ஊராட்சியில், ஒன்றிய பொது நிதி 2023-24ன் கீழ், ₹8 லட்சம் மதிப்பில், அப்பகுதி மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், பாதுகாக்கப்பட்ட சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்கும் ஆர்.ஓ. நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் கடத்தூர் ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமரன் தலைமை தாங்கி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தேவராஜ், சந்திரேசேகர், தமிழ்மணி சிவகுமார், பீமன், ரவி, பச்சியப்பன், பழனி, சக்தி, மாது, கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ₹8 லட்சம் மதிப்பில் ஆர்.ஓ.நிலையம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : RO ,Kaduur ,Rekadaalli Panchayat ,Kaduur Union ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் ஆர்ஓ அலுவலகத்தில் நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்