×

வேன் மோதி மாணவன் பலி தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் அதிரடி சஸ்பெண்ட்

சென்னை: சென்னை வளசரவாக்கம், ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 28ம் தேதி 2ம் வகுப்பு படித்து வந்த மாணவன் தீக்‌ஷத் (7) வேன் மோதி உயிரிழந்தான். இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குபதிந்து வேன்  டிரைவர் பூங்காவனம் மற்றும் பெண் உதவியாளர் ஆகியோரை கைது செய்து  சிறையில் அடைத்தனர். மேலும் பள்ளி தாளாளர் மற்றும் பள்ளி முதல்வர் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்தனர். மேலும்  மாவட்ட கல்வி அதிகாரி, வருவாய் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி விளக்கம் அளிக்கும்படி பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில் பள்ளி கல்வித்துறையின் பரிந்துரைபேரில் பள்ளி முதல்வர், வேன் டிரைவர் பூங்காவனம், பெண் ஊழியர் ஆகிய 3 பேரையும் பள்ளி நிர்வாகம் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது….

The post வேன் மோதி மாணவன் பலி தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் அதிரடி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Growavaravakam ,Aalwar Thirunagar ,Action Suspend ,
× RELATED பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை...