×

வீட்டில் பட்டாசு தயாரித்த 4 பேர் மீது வழக்கு பதிவு

 

ஏழாயிரம்பண்ணை, மே 8: வெம்பக்கோட்டை அருகே வீட்டில் பட்டாசு தயாரித்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டி, விஜயகரிசல்குளம் உள்ளிட்ட பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சார்பு ஆய்வாளர்கள் வெற்றி முருகன், ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தாயில்பட்டி டி.ராமலிங்காபுரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன்(35), உமாராஜ் (55), வீரராஜ் (50), செல்வராஜ் (61) ஆகியோர் வீட்டில் அரசு அனுமதி இல்லாமல், எளிதில் தீப்பற்றக்கூடிய மருந்து செலுத்திய வெள்ளைதிரிகள் சுமார் 180 கிலோ எடை கொண்ட வெடிகள் வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து வெடி மருந்து பொருட்களை பறிமுதல் செய்த வெம்பக்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டில் பட்டாசு தயாரித்த 4 பேர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Ejayarampannai ,Vembakkottai ,Dinakaran ,
× RELATED ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை...