×

விழுப்புரம் நகராட்சியில் லஞ்சம் வாங்கிய வருவாய் பெண் உதவியாளர் கைது  அலுவலகத்தில் பல மணி நேரம் சோதனை

விழுப்புரம், செப். 26: விழுப்புரம் நகராட்சியில் காலி மணை வரி விதிப்பு எண் வழங்க லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் உதவியாளரை போலீசார் கைது செய்தனர். அலுவலகத்தில் நடந்த பல மணி நேர சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது. திருவள்ளூரை சேர்ந்தவர் இளங்கோவன்(45). இவர் சென்னையில் மேன்ஷன் வைத்து நடத்தி வருகிறார். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் நகராட்சி மகாராஜபுரத்தில் 2 காலி வீட்டு மனை வாங்கியுள்ளார். இதனிடையே இந்த காலி மணைக்கு வரி விதிப்பு எண் வழங்கிடகோரி நகராட்சி அலுவலகத்தில் பெண் வருவாய் உதவியாளர் குணாவிடம் விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பத்தை பெற்ற குணா ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத இளங்கோவன் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நேற்று வருவாய் உதவியாளர் குணா காலிமனையை பார்வையிட சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய ரூ.10,000 லஞ்ச பணத்தை கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி தலைமையிலான போலீசார் அவரை கையும், களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து நகராட்சி அலுவலகத்திற்கு அவரை அழைத்து வந்து வருவாய் பிரிவில் வரி விதிப்பு தொடர்பான ஆவணங்கள் குறித்தும் சோதனை நடத்தினர். பல மணி நேரம் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

The post விழுப்புரம் நகராட்சியில் லஞ்சம் வாங்கிய வருவாய் பெண் உதவியாளர் கைது  அலுவலகத்தில் பல மணி நேரம் சோதனை appeared first on Dinakaran.

Tags : Villupuram Municipality ,Villupuram ,Tiruvallur… ,
× RELATED ரயில் பிளாட்பாரத்தில் இட்லிக்கு...