×

வில்லன் வேடம் யாரும் தருவதில்லை: சோனு சூட் மகிழ்ச்சி

மும்பை, : எனக்கு வில்லன் வேடங்களை இப்போது எந்தவொரு டைரக்டரும் தருவதில்லை என்றார், நடிகர் சோனு சூட். இதுகுறித்து அவர் கூறியதாவது:அக்‌ஷய் குமாருடன் நான் நடித்துள்ள ‘சாம்ராட் பிருத்விராஜ்’ இந்தி படம் இன்று திரைக்கு வருகிறது. இதில் நான் பிருத்விராஜ் அரசருக்கு நம்பிக்கைக்குரிய சிப்பாய் வேடத்தில் நடித்துள்ளேன். இதில் வில்லனாக நடிக்கவில்லையா என்று பலரும் கேட்டார்கள். கொரோனா பரவல் காலத்தில் நான் செய்த உதவிகளால் மக்களுக்கு என்மீது நம்பிக்கை வந்திருக்கிறது. இதன்மூலம் எனது இமேஜ் மாறிவிட்டது. என்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள், வில்லன் வேடம் உங்களுக்கு பொருந்தாது. ஹீரோவுக்கு நண்பன், ஹீரோயினுக்கு சகோதரன், நல்ல போலீஸ் அதிகாரி என்று பாசிட்டிவ் கேரக்டர்களையே கொண்டு வருகிறார்கள். இந்த மாற்றமும் எனக்குப் பிடித்து இருக்கிறது. ஹீரோவாக நடிக்க சிலர் கேட்டனர். கதை நன் றாக அமைந்தால் ஹீரோவாகவும் நடிப்பேன்….

The post வில்லன் வேடம் யாரும் தருவதில்லை: சோனு சூட் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Sonu Sood ,Mumbai ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்களின் தரவுகள் திருட்டா?: ஏர்டெல் நிறுவனம் மறுப்பு