×

வியாபாரியை கத்தியால் தாக்கிய வாலிபர் கைது

தேன்கனிக்கோட்டை, மே 16: தேன்கனிக்கோட்டை கீழ்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகபூப்பாஷா மகன் அப்சல்பாஷா(22). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள எல்லப்பா என்பவரது காய்கறி கடைக்கு சென்று, கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அப்சல்பாஷா, கத்தியால் அவரை தாக்க முயன்றார். இதை பார்த்த அங்கிருந்த நந்தகுமார் (45) என்பவர், தடுக்க முயன்றார். இதில் அவரது வலது கை விரலில் கத்தியால் வெட்டியதில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து நந்தகுமார் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அப்சல்பாஷாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.

The post வியாபாரியை கத்தியால் தாக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Mahabupasha ,Absalpasha ,Dhenkanikottai Kilikottai ,Ellappa ,
× RELATED பள்ளி மாணவி மாயம்; வாலிபர் மீது புகார்