×

வியாபாரிகளின் நலன் காக்க அரசு உறுதுணையாக இருக்கும் தங்கப்பாண்டியன் எம்எல்ஏ உறுதி

ராஜபாளையம்: வியாபாரிகளின் நலன் காக்க தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும் என, தங்கப்பாண்டியன் எம்எல்ஏ தெரிவித்தார். ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் தங்கப்பாண்டியன் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். அப்போது வியாபாரிகள், பேருந்து நிலையத்தில் உரிய இடத்தில் பேருந்துகளை நிறுத்த வேண்டும், பேருந்து நிலையத்திலுள்ள காவல் நிலையத்தில் நிரந்தரமாக எப்போதும் போலீசார் இருக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து காவல் நிலைய ஆய்வாளரை அழைத்து உடனடியாக காவல் துறையினரை நியமிக்குமாறு எம்எல்ஏ கேட்டுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து பஸ் டிப்போ மேலாளர்களை அழைத்து அந்தந்த பேருந்து நிறுத்தும் இடங்களில் பேருந்தை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். இதையடுத்து பேசிய எம்எல்ஏ,

The post வியாபாரிகளின் நலன் காக்க அரசு உறுதுணையாக இருக்கும் தங்கப்பாண்டியன் எம்எல்ஏ உறுதி appeared first on Dinakaran.

Tags : Thangapandian ,MLA ,Rajapalayam ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED ரயில் ஓட்டுநர் பிரச்னைகளை உடனடியாக...