×

வாலிபர் கொலை வழக்கில் 6 பேர் கைது

 

விருதுநகர், ஆக.30: விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டியை சேர்ந்தவர் ஆத்தியப்பன்(33). இவர் கட்டனார்பட்டி கிராமத்தில் உள்ள கிணற்றில் ஆக.26ல் சாக்கு மூட்டையில் கைகள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். வச்சக்காரப்பட்டி போலீசார் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஆத்தியப்பனை முன்விரோதம் காரணமாக ஓ.கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெகதீஸ்(19), மாரீஸ்வரன்(24), வசந்தகுமார்(19) உள்பட 6 பேர் சேர்ந்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வாலிபர் கொலை வழக்கில் 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Athiyappan ,O.Kovilpatti ,Katanarpatti ,
× RELATED விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே...