×

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்கள் தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்.!

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்கள் தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்படும்.நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்; அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது….

The post வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்கள் தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்.! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Puducherry ,Chennai ,
× RELATED வழக்கறிஞர் சங்க தேர்தலை ஆகஸ்டுக்குள்...