புதுடெல்லி: வருமான வரித்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜூலை 29ம் தேதியான நேற்று முன்தினம் வரை ரூ.4.52 கோடி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ரூ.43 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர். நாளைக்குள் (இன்று) வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத பட்சத்தில், டிசம்பர் 31ம் தேதி வரையில் கணக்கை தாக்கல் செய்யலாம். ஆனால், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் தாமதக் கட்டணம் ரூ.5,000, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் தாமதக் கட்டணம் ரூ.1,000 செலுத்த வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது….
The post வருமான வரி கணக்கு தாக்கல் இன்றே கடைசி நாள்: தவறினால் ரூ.5,000 அபராதம் appeared first on Dinakaran.