×

லாரி மோதி காரில் சென்ற திண்டிவனம் தாசில்தார் பலிதாய், மகன் படுகாயம்செய்யாறு அருகே பரிதாபம்

செய்யாறு, ஏப். 9: செய்யாறு அருகே லாரி மோதி காரில் சென்ற திண்டிவனம் தாசில்தார் பரிதாபமாக இறந்தார். மேலும் காயமடைந்த தாசில்தாரின் மனைவி, மகன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா லட்சுமிபதி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன்(54). இவர் திண்டிவனத்தில் தாசில்தாராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பூங்கோதை (48), இவர்களது மகன் சிவசங்கரன்(21) ஆகிய மூவரும் தனக்கு சொந்தமான காரில் நேற்று முன்தினம் காலை காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர்.

சுவாமி தரிசனம் முடிந்து மீண்டும் வீடு திரும்பி சென்றபோது காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில் நெடுங்கல் கூட்ரோடு அருகே எதிரே காஞ்சிபுரம் நோக்கி வந்த லாரி கார் மீது மோதியது. இதில் வெங்கடசுப்பிரமணியனின் தலை, முகம் ஆகிய பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் காரில் பயணம் செய்த மனைவி பூங்கோதை, காரினை ஓட்டிச் சென்ற மகன் சிவசங்கரன் ஆகியோருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனே அவர்களை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வெங்கடசுப்பிரமணியனின் உறவினர் விக்னேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் அனக்காவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த வெங்கடசுப்பிரமணியனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post லாரி மோதி காரில் சென்ற திண்டிவனம் தாசில்தார் பலி
தாய், மகன் படுகாயம்
செய்யாறு அருகே பரிதாபம்
appeared first on Dinakaran.

Tags : Tindivanam Tahsildar Balitai ,Padukayamseyyar ,Seyyar ,Tindivanam ,Seiyaru ,Balitai ,Dinakaran ,
× RELATED லோடு ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்து...