×

ரூ.17.64 லட்சம் மதிப்பீட்டில் ஓராண்டுக்கு முன் கட்டப்பட்டும் திறக்கப்படாத ஊராட்சி மன்ற கட்டிடம்; கோப்புகளை பராமரிப்பதில் சிக்கல்: பயன்பாட்டிற்கு திறக்க கிராம மக்கள் கோரிக்கை

பெரியபாளையம்: அக்கரபாக்கம் ஊராட்சியில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை. கிராம மக்கள் பயன்பாட்டிற்காக  திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே உள்ளது அக்கரபாக்கம் கிராமம். இங்கு, சுமார் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்தில் நிர்வாகம் இயங்கி வந்தது.  அது, பழைய கட்டிடம் என்பதால் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து மழைக்காலங்களில், மழைநீர் ஒழுகும் நிலை இருந்தது. இந்த பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என கிராமமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.  இந்நிலையில், தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் கடந்த 2019-20ம் ஆண்டில் ₹17.64 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்றக் கட்டிடம், பழைய ஊராட்சி மன்ற கட்டிடம் அருகே  கட்டிமுடிக்கப்பட்டது. தற்போது, வரை திறக்கப்படவில்லை. அக்கரபாக்கம் பகுதியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இ-சேவை மைய கட்டிடத்தில்தான், ஊராட்சி மன்றக் கட்டிடம் தற்போது வரை இயங்கி வருகிறது.  மேலும், கட்டடம் திறக்காததால், ஊராட்சி சம்பந்தமான முக்கியமான கோப்புகளை  பராமரிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கிராமமக்கள் கூறுகையில், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இ-சேவை மைய கட்டிடத்தில் பணியாற்றுவதில், சிரமமும் ஏற்பட்டுள்ளது. எனவே, இது மட்டுமல்லாமல் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதி பிரச்னைகள் குறித்து தெரிவிக்க,  நீண்ட தூரத்தில் உள்ள சேவை மைய கட்டிடத்திற்கு செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், கிராம சபை கூட்டம் நடத்த முடியவில்லை. மாதாந்திர ஊராட்சி கூட்டமும் நடத்த முடியவில்லை. இதில், புதிய ஊராட்சி மன்றக் கட்டிடம் ₹17.64 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு 1 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் மூடி கிடக்கிறது. இந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை, உடனடியாக திறக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து கூறினர்….

The post ரூ.17.64 லட்சம் மதிப்பீட்டில் ஓராண்டுக்கு முன் கட்டப்பட்டும் திறக்கப்படாத ஊராட்சி மன்ற கட்டிடம்; கோப்புகளை பராமரிப்பதில் சிக்கல்: பயன்பாட்டிற்கு திறக்க கிராம மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Panchayat Council ,Akkarapakkam Panchayat ,Panchayat ,Dinakaran ,
× RELATED பெரியபாளையம், திருக்கண்டலம் அரசு...