×

ராகுல்காந்தி பிரசாரத்திற்கு பெருந்திரளாக பங்கேற்க அழைப்பு: காங்கிரஸ் மாநில செயலாளர் அறிக்கை

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தி தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று காலை தமிழகம் வந்து, வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஹசன் மவுலானாவை ஆதரித்து அடையாறு டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகில் பிரசாரம் செய்ய உள்ளார். இதில், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் பெருந்திரளாக வருமாறு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மாநில  செயலாளரும், புழல் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவரான லைன்ஸ் வி.பர்னபாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்த பிரசாரத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக செயல் தலைவரும், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.ஜெயக்குமார், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருவேற்காடு டி.ரமேஷ் மற்றும் காங்கிரஸ் கட்சி மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். எனவே அனைவரும் இன்று காலை 9 மணியளவில் சென்னை அடையாறு டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகில் திரண்டு வரவேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post ராகுல்காந்தி பிரசாரத்திற்கு பெருந்திரளாக பங்கேற்க அழைப்பு: காங்கிரஸ் மாநில செயலாளர் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Congress ,Chennai ,All India Congress ,Tamil Nadu ,Tamil Nadu assembly ,
× RELATED நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து...