×

ராணிப்பேட்டை பெல் ஊழியர் குடியிருப்பில் அடுத்தடுத்த 11 வீடுகளில் கொள்ளை

வேலூர்: வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் அடுத்தடுத்த 11 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராணிப்பேடை பெல் நிறுவன குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் திருட்டு நடந்ததாக கூறப்படுகிறது. கோடை விடுமுறைக்காக அங்கு வசித்து வந்த மக்கள் வெளியூர் சென்றுள்ளனர். இந்நிலையில் இந்த திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

வீடுகளின் கதவு உடைக்கப்பட்டு நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராணிப்பேட்டை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி அங்குள்ள பழய குடியிருப்பு பகுதியில் திருட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED கடப்பாவிலிருந்து சென்னைக்கு அனுப்ப...