×

மொடக்குறிச்சி விற்பனை கூடத்தில் ரூ.5 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

மொடக்குறிச்சி, ஆக.3: மொடக்குறிச்சி உப ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 20 ஆயிரத்து 125 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.24.19க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.41க்கும், சராசரி விலையாக ரூ.23.17க்கும் ஏலம் போனது. மொத்தம் 8,733 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 182 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல் தேங்காய் பருப்பு 146 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.83.09க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.76.99க்கும், சராசரி விலையாக ரூ.82.90க்கும், இரண்டாம் தரம் அதிகபட்ச விலையாக ரூ.72.60க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.52.90க்கும், சராசரி விலையாக ரூ.65.10க்கு ஏலம் போனது. மொத்தமாக 4,862 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு ரூ.3 லட்சத்து 65 ஆயிரத்து 228 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது. மொத்தமாக தேங்காய், தேங்காய் பருப்பு சேர்த்து ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்து 410 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

The post மொடக்குறிச்சி விற்பனை கூடத்தில் ரூ.5 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் appeared first on Dinakaran.

Tags : Modakurichi ,Modakurichi Sub-Regulatory Hall ,Dinakaran ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பள்ளி...