×

மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் சாணிப்பவுடர் குடித்து மூதாட்டி தற்கொலை

 

மேட்டுப்பாளையம், ஜூலை 8: மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் மூதாட்டி சாணிப்பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள எல்லப்பாளையம் பிரிவு நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (75). இவர், கடந்த 5 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி ஈஸ்வரி (70). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். மேலும், மூத்த மகள் சுமதி வீட்டில் ஈஸ்வரி வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ஈஸ்வரிக்கு மூளையில் கட்டி இருந்து வந்தது.

இதனால், மூதாட்டி மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு சாணிப்பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூதாட்டி ஈஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் சாணிப்பவுடர் குடித்து மூதாட்டி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Mettupalayam bus station ,Mettupalayam ,Coimbatore ,bus station ,
× RELATED பவானி ஆற்றில் நீர்வரத்து...