×

முந்திரி குழம்பு

செய்முறை:;வெங்காயம் மற்றும் பூண்டை இரண்டிரண்டாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். புளியை இரண்டு கப் தண்ணீரில்; கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு; தாளிக்கவும். பிறகு வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதக்கியவற்றுடன் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து; தக்காளி மசியும் வரை வதக்கவும். தக்காளி குழைந்ததும் புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க வைக்கவும். தேங்காய் துருவலுடன் முந்திரியை சேர்த்து நைசாக அரைத்து குழம்பில் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்.; சுவையான முந்திரிக் குழம்பு தயார்.

The post முந்திரி குழம்பு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பூத்து குலுங்கும் டெய்சி மலர்கள்