×

முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தை மேம்படுத்த உள்ளாட்சி தேர்தலில் 100க்கு 100% மக்கள் வெற்றியை தர வேண்டும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் சேகர்பாபு நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது அவர் அளித்த பேட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையை சிங்கார சென்னையாக்குவேன் என்று ஒரு உறுதியோடு செயல்பட்டவர். இப்போதும் செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவர் திமுகவின் தலைவராகவும் இருக்கின்றார். அதே போல நாடாளுமன்ற உறுப்பினர் திமுகவை சார்ந்தவர் தான் இருக்கிறார். சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் நானும் திமுகவை சார்ந்தவன். மமக சார்பில் போட்டியிட்டாலும் அவரும் உதயசூரியன் சின்னத்தில் தான் நிறுத்தப்பட்டிருக்கிறார். ஆகவே, 4 பேரும் ஒரு சேர கருத்துடையவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பினால், இந்த பகுதிவாழ் மக்களின் அடிப்படை தேவைகள், இப்பகுதி மக்களின் முன்னேற்றத்திற்கு முழுவதுமாக பாடுபடுவதற்கு ஒரு நல்வாய்ப்பாக அமையும். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது கடுமையான நிதி நெருக்கடி இருந்தது. இருந்த போதிலும் அறிவித்த தேர்தல் அறிக்கையில் 500ல் 300க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்தி காட்டியிருக்கிறார். நீட்டுக்கு தீர்மானம் அனுப்பினால் திரும்பி அனுப்பும் நிலை. இவை எல்லாவற்றையும் எதிர்த்து போராடுவதற்கு முதல்வரின் கரத்தை மேம்படுத்த உள்ளாட்சி தேர்தலில் 100க்கு 100 சதவீதம் மக்கள் வெற்றியை தர வேண்டும். …

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தை மேம்படுத்த உள்ளாட்சி தேர்தலில் 100க்கு 100% மக்கள் வெற்றியை தர வேண்டும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : CM. G.K. Enhance Stalin ,Minister ,B. K.K. SegarBabu ,Chennai ,Dishaghagam ,Coalition Party ,Principal ,B.C. G.K. Enhance Stalin ,
× RELATED முதல்வர் அறிவிக்கும் அரசு திட்டங்களை அதிகாரிகள் கொண்டு சேர்க்க வேண்டும்